சிறப்பு அந்தஸ்து ரத்து.. பசு பாதுகாவலர்களால் முஸ்லிம் இளைஞர்கள் கொலை - டெல்லி தாக்குதல் குற்றவாளியை பாதித்த விஷயங்கள்
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
- அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே 15 பேர் உயிரிழந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீரை டாக்டர் உமர்-உன்-நபி இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது.
உமர் உடன் தொடர்புடைய 3 மருத்துவர்கள், தாக்குதலுக்கு பயனப்டுத்தப்பட்ட காரை வாங்கி தந்த டீலர் உட்பட 6 பேரை கைது செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான முசாமில் ஷகீல் விசாரணையின்போது அமீர் பற்றிய சில தகவல்களை என்ஐஏவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
விசாரணை வட்டாரங்களின்படி, "உமர்-உன்-நபி ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அணு விஞ்ஞானியாக எளிதில் மாறும் அளவுக்கு அவர் புத்திசாலி. அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார். மதத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று இறுதிவரை என்னை நம்ப வைத்தார்" என்று முசாமில் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் விசாரணை வட்டாரங்களின்படி, 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் உமர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அரியானாவில் மேவாட்-நூ பகுதியில் வகுப்புவாத மோதல்கள் மற்றும் பசு பாதுகாவலர்களால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக உமர் அடிக்கடி கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைத் தாக்குதலுக்கு, அசிட்டோன், சர்க்கரைப் பொடி மற்றும் யூரியாவைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சூடேக்சில் வைத்து அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும்,அல் பாலா பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறையில் வெடிகுண்டு தயாரிக்கும் பரிசோதனைகளை உமர் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.