இந்தியா

தேர்தலை முன்னிட்டு ஓட்டல் அறையில் மூட்டைகளில் கட்டி பதுக்கிய பணம் பறிமுதல்

Published On 2024-03-16 04:22 GMT   |   Update On 2024-03-16 04:22 GMT
  • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
  • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பதி:

தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து உள்ளது. காங்கிரஸ் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு கரீம் நகர் உதவி போலீஸ் கமிஷனர் நரேந்தர் தலைமையிலான போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்குள்ள அறை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகள் எண்ணும் எந்திரம் மூலம் பணத்தை எண்ணினர்.

அப்போது ரூ.6.65 கோடி இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இது குறித்து உதவி கமிஷனர் நரேந்தர் கூறுகையில்:-

பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த பணத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News