இந்தியா

பிரதமர் மோடி விமானத்துக்கு எப்-15 போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கிய சவுதி அரேபியா

Published On 2025-04-22 15:28 IST   |   Update On 2025-04-22 15:28:00 IST
  • பிரதமர் மோடி விமானத்துக்கு சவுதி அரேபியா அரசு எப்-15 ரக விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
  • இந்தியா , சவுதி அரேபியா இடையிலான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார் பிரதமர் மோடி.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோவை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.


Tags:    

Similar News