இந்தியா
உத்தர பிரதேசத்தில் கார்-லாரி மோதல்: 8 பேர் பலி
- வாரணாசியில் இருந்து ஜான்பூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியது.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஜான்பூருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் பூபுர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சென்றபோது லாரி மீது மோதியது. இதில் 8 பேர் பலியானார்கள். 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியது. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.