இந்தியா

பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம்: குருவாயூர் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு- கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2022-06-13 07:39 GMT   |   Update On 2022-06-13 07:39 GMT
  • பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
  • கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது குருவாயூர் கிருஷ்ணன் கோவில்.

இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவிலில் எப்போதும் இருக்கும்.

இந்த நிலையில் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோவில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கோவிலுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் தான் கோவிலுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News