இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 6337 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2023-09-26 04:18 GMT   |   Update On 2023-09-26 04:18 GMT
  • கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது.

பெங்களூரு:

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 4-வது நாளாகவும் வினாடிக்கு 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 7ஆயிரத்து 134 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து 3ஆயிரத்து 837 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 384 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News