இந்தியா

10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை.. ஐடியா கொடுத்த மந்திரவாதி ஆதாரம் இல்லாததால் விடுதலை

Published On 2026-01-11 09:07 IST   |   Update On 2026-01-11 09:07:00 IST
  • அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.
  • சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்புவழங்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த அனூப் குமார் வர்மா தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மாந்திரீகனை சென்று சந்தித்தார்.

அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.

இதை குமார் வர்மா, தனது உறவினரின் மகனான 10 வயது விவேக் வர்மாவை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்று நரபலி கொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சுனில் பிரசாத் நேற்று தீர்ப்பு வாசித்தார்.

இந்த வழக்கின் கொடூரத்தன்மை மற்றும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனூப் குமாருக்கு மரண தண்டனை விதித்தார்.

மேலும், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உட்பட இருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News