இந்தியா

அருணாசலில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்: தேர்தல் ஆணையம்

Published On 2024-04-23 01:38 GMT   |   Update On 2024-04-23 01:38 GMT
  • அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவித்தது.
  • இந்த வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடா நகர்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 19-ம் தேதி நடந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தலுடன், சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்திருந்தன. இவ்வாறு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் 24ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News