இந்தியா
- ராகுல்காந்தி ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளார்.
- காலை 8.35 மணிக்கு கண் சிகிச்சை மையத்துக்கு சென்ற ராகுல் காந்தி 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மும்பை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ராகுல் காந்தி, தெற்கு மும்பையில் பெடர் சாலையில் உள்ள கண் சிகிச்சை மையத்துக்கு சென்றார். அங்கு அவர் கண் பரிசோதனை மேற்கொண்டார். காலை 8.35 மணிக்கு கண் சிகிச்சை மையத்துக்கு சென்ற அவர் 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.