இந்தியா

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

Published On 2024-01-25 14:07 GMT   |   Update On 2024-01-25 14:08 GMT
  • வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும்.
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இது மாற்றத்திற்கான தருணம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். 140 கோடி இந்தியர்களும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் அஞ்சலி. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விற்கு நாம் அனைவரும் சாட்சியாக விளங்குகிறோம்.

நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும். நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அறிஞர்கள் குறித்து நாம் எப்போதுமே பெருமைக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News