இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Published On 2022-07-30 18:28 GMT   |   Update On 2022-07-30 18:28 GMT
  • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வென்றுள்ளது.
  • பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.

புதுடெல்லி:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.

இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News