இந்தியா

நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்: பிரசாந்த் கிஷோர்

Published On 2025-04-12 03:58 IST   |   Update On 2025-04-12 03:58:00 IST
  • பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே நிதிஷ்குமார் இருப்பார்.
  • பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்றார்.

பாட்னா:

பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன்.

தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்.

பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனவே அவர் பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News