என் மலர்
நீங்கள் தேடியது "Bihar Politics"
- பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே நிதிஷ்குமார் இருப்பார்.
- பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன்.
தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்.
பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனவே அவர் பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் என தெரிவித்தார்.
- நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
- இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் என்றார்.
பாட்னா:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.
பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெறமுடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெறமுடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.






