இந்தியா

2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2025-11-11 08:52 IST   |   Update On 2025-11-11 08:53:00 IST
  • இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
  • பூடான் மன்னருடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார்.

இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Tags:    

Similar News