இந்தியா

ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2024-01-31 05:16 GMT   |   Update On 2024-01-31 05:16 GMT
  • பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அப்போது அவர் கூறுகையில், அனைத்து எம்.பி.க்களும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இது மிகவும் மகத்துவமான கூட்டத்தொடர்.

இன்று ஜனாதிபதியின் உரையும், நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் உரையும் இடம்பெறுகிறது. இது மகளிர் சக்திக்கான அடையாளம்.

இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. புதிய அரசு அமைந்தபிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்தக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த சந்தர்ப்பத்தை எந்த ஒரு உறுப்பினரும் தவற விட்டுவிட்டாமல் முடிந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News