வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தாமரை சின்னத்தில் படுத்து கதறி அழுத பா.ஜ.க. எம்.பி.
- சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார்.
- சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூபதி ராஜு சீனிவாச வர்மா இவர் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் நரசபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த சீனிவாச வர்மா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் சீனிவாச வர்மா உணர்ச்சிவசப்பட்டார்.
கட்சி அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க. தாமரை சின்னத்தின் மீது கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். இதனைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க வாழ்க என கோஷம் எழுப்பினர்.
பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடியே உணர்ச்சி வசப்பட்ட எம்.பி.யை அவரது ஆதரவாளர்கள் தூக்கி சமாதானம் செய்தனர்.
சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார். தன்னுடைய 30 ஆண்டு கால உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பா.ஜ.க. தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.