இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் ஒரு சதுரங்க விளையாட்டு - ராணுவ தலைமைத் தளபதி வெளியிட்ட விவரங்கள்!

Published On 2025-08-10 11:44 IST   |   Update On 2025-08-10 11:58:00 IST
  • இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone)
  • இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.

ராணுவ தலைமைத் தளபதி  உபேந்திர திவேதி ஐஐடி மெட்ராஸில் அக்னிசோத் என்ற ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கி வைத்து  உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஏனென்றால், எதிரி இங்கே என்ன செய்வார், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது.

இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone). நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.

நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர்களும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தார். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் ஏப்ரல் 23 அன்று தொடங்கியது. அன்று, முப்படைகளின் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒரு முடிவுக்கு வந்தனர். எந்த முக்கிய முடிவையும் எடுக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள், திட்டத்தைத் தயாரித்து, ஒன்பது இலக்குகளில் ஏழு தாக்குதல்களை நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை முந்தைய உரி மற்றும் பாலகோட் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது. உரி நடவடிக்கையில், ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டது.

பாலகோட்டில், பாகிஸ்தானில் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால் ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் எதிரி பிரதேசத்திற்குள் சென்று நர்சரி மற்றும் மாஸ்டர்ஸ் என்ற குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட முக்கிய இலக்குகளை அழித்தோம்.

இந்த நடவடிக்கையில் ஐந்து இலக்குகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரிலும், நான்கு இலக்குகள் பஞ்சாபிலும் உள்ளன. இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.

இந்த டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் நிறுத்தப்பட்டது. ஆனால் இது 14, 140 நாட்கள் அல்லது 1400 நாட்களுக்கு கூட தொடரலாம், மேலும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் தங்கள் நாட்டவரை திருப்திப்படுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங்கும் ஆபரேஷன் சிந்தூரில் 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியகாக நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News