இந்தியா

ஹெப்பகோடியில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி

Published On 2022-11-16 03:40 GMT   |   Update On 2022-11-16 03:40 GMT
  • இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
  • இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஆனேக்கல் :

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News