இந்தியா

மோடிக்கு திருட்டு பழக்கம் உண்டு: காங்கிரஸ் தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு..!

Published On 2025-09-01 17:36 IST   |   Update On 2025-09-01 17:38:00 IST
  • வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
  • இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது.

பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், மோடி மற்றும் அமித் ஷா உங்களை அடக்கி வைத்து விடுவார்கள்.

மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.

இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும்.

இவ்வாறு கார்கே பேசினார்.

Tags:    

Similar News