இந்தியா
null

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்ற பிரதமர் மோடி

Published On 2026-02-17 16:00 IST   |   Update On 2026-02-17 16:04:00 IST
  • மும்பையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
  • மேக்ரானை வரவேற்பதற்கான பிரதமர் மோடி டெல்லியில் இன்று மும்பை சென்றார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இரு தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மும்பையில் உள்ள லோக் பவனில் நடைபெற இருக்கிறது.

இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி மும்பை சென்றார். பின்னர், லோக் பவனில் மேக்ரானை வரவேற்றார். அவரை கைக்கலுக்கி கட்டிப்பிடித்து பிரதமர் மோடி வரவேற்றார்.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

Tags:    

Similar News