இந்தியா

இலங்கைக்கு Mi-17 மற்றும் Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைப்பு

Published On 2025-11-30 00:15 IST   |   Update On 2025-11-30 00:15:00 IST
  • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
  • 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

இந்த நிலையில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இலங்கையில் மீட்புப் பணிகளுக்கு உதவ இந்தியாவின் தலா இரு Mi-17, Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News