இந்தியா
null

காணாமல் போன கடற்படை வீரரை தேடும் பணிகள் தீவிரம்

Published On 2024-03-03 11:28 IST   |   Update On 2024-03-03 11:31:00 IST
  • பிப்ரவரி 27லிருந்து ஸாஹில், அவர் பணியாற்றி கொண்டிருந்த கப்பலிலிருந்து காணாமல் போனார்
  • கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனார்.

கடந்த மாதம் 27லிருந்து காணாமல் போனதாக கூறப்படும் "ஸாஹில் வர்மா" (Sahil Verma) எனும் அந்த கடற்படை வீரரை தேட, உயர்-மட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு மண்டல ஆணைய (Western Naval Command) தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ எக்ஸ் (X) வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கடற்படையின் இரண்டாம் நிலை வீரராக (Seaman II) பணிபுரிந்த ஸாஹில் வர்மா, 2024 பிப்ரவரி 27 அன்றிலிருந்து தான் பணியாற்றி வந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து துரதிர்ஷ்டவசமாக காணவில்லை.


தகவல் அறிந்ததும் உடனடியாக இந்திய கடற்படை, கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த விசாரணையை, கடற்படை வாரியம் தொடங்கியுள்ளது.

இவ்வாறு கடற்படை தெரிவித்துள்ளது.

தற்போது வரை கடற்படை வீரர் ஸாஹில் சர்மா, காணாமல் போன பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News