இந்தியா

துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற முதல் மந்திரி

Published On 2024-04-16 12:06 GMT   |   Update On 2024-04-16 12:06 GMT
  • சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மும்பை:

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுசெய்தனர்.

இதற்கிடையே, சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை நேரில் சென்றார். அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் மந்திரி சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News