இந்தியா

கர்நாடகாவில் 10 இடங்களில் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை

Published On 2025-11-25 13:40 IST   |   Update On 2025-11-25 13:40:00 IST
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
  • 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 10 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி மாண்டியா முனிசிபல் கவுன்சில் புட்டசாமி, கிருஷ்ணா மேட்டு நிலத்திட்ட தலைமை பொறியாளர் பிரேம் சிங், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழக இணை பேராசிரியர் சுபாஷ் சந்திரா, மூத்த கால்நடை பரிசோதகர் சதீஷ், ஹாவேரி திட்ட இயக்குனர் அலுவலக நிர்வாக பொறியாளர் சேகப்பா, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி துணை அலுவலக மேலாளர் குமாரசாமி உள்பட 10 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிவில் தான் என்ன கைப்பற்றப்பட்டது என்று தெரியவரும்.

Tags:    

Similar News