இந்தியா

கொல்கத்தாவில் புதிய சரித்திரம்: நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே மெட்ரோ ரெயில் ஓடியது

Published On 2023-04-13 07:51 IST   |   Update On 2023-04-13 07:51:00 IST
  • நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவது இதுவே முதல் முறை.
  • கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை புதிய சரித்திரம் படைத்துள்ளது.

கொல்கத்தா :

பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் (பறக்கும் பாதை) செல்கின்றன.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவது இதுவே முதல் முறை.

அந்த வகையில் கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை நேற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

கொல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரெயில் நிலையம் வரையில் இந்த சுரங்கப்பாதையில் நேற்று மெட்ரோ ரெயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அதில் மெட்ரோ ரெயில்வே பொது மேலாளர் உதய்குமார் ரெட்டி, அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் பயணம் செய்தனர்.

இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் மக்களுக்கு நவீன போக்குவரத்துச் சேவையை வழங்குவதில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News