இந்தியா
null

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. அஞ்சி நடுங்கும் மக்கள்..

Published On 2023-12-14 08:55 GMT   |   Update On 2023-12-14 12:31 GMT
  • எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.
  • கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு.

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், டிசம்பரில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.

 


"தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், அதன் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலைமை கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. எனினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது," என மருத்துவர் முகமது நியாஸ் தெரிவித்து உள்ளார். 

Tags:    

Similar News