இந்தியா

அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது - பிரதமர் மோடி

Published On 2025-12-06 09:08 IST   |   Update On 2025-12-06 09:08:00 IST
  • பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம்.
  • அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழி நடத்துகிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம். கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை தூண்டியவர், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என்று கூறியுள்ளார். 



Tags:    

Similar News