இந்தியா

மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி லைப் மிஷன் திட்டத்தை இழிவுபடுத்துகின்றனர்- பினராயி விஜயன்

Published On 2023-11-13 07:16 GMT   |   Update On 2023-11-13 07:16 GMT
  • திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்
  • கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் லைப் மிஷன் வீட்டுத் திட்டத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி சிலர் இழிவுபடுத்த முயல்கின்றனர். அவர்கள் லைப்மிஷன் திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News