இந்தியா

மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கொரோனா

Published On 2023-04-19 01:57 GMT   |   Update On 2023-04-19 01:57 GMT
  • சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
  • என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

புதுடெல்லி :

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில், சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (வயது 52).

இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கொரோனா மாதிரி பரிசோதனையில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. என்னோடு கடந்த சில நாட்களில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்" என கூறி உள்ளார்.

Tags:    

Similar News