இந்தியா

வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல்: இதுதான் இந்தியாவின் இலக்கு..! பிரதமர் மோடி

Published On 2025-05-26 15:07 IST   |   Update On 2025-05-26 15:07:00 IST
  • பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது.
  • பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அங்குள்ள தாஹோத்தில் நடைபெற்று பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

* கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில் (மே26- 2014) ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானேன்.

* நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.

* மக்கள் ஹோலி, தீபாவளி மற்றும் வினாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

* நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இங்கேயே செய்யப்பட வேண்டும்

* பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை

* நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.

* பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது

* பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.

* இந்தியாவின் இலக்கு வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாறுதல்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News