இந்தியா
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 நீர்மூழ்கி கப்பல்கள் - ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தியா முடிவு
- சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வருகிறது.
- பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்ய இந்தியா முடிவு
இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், 2026ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்சின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலையும், ஜெர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை அரசுக்கு சொந்தமான மசகான் டாக் லிமிடெட் (MDL) மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படை குழுமத்தால் கூட்டாக கட்டப்படும் என்று கூறப்படுகிறது.