இந்தியா
இந்தியா-சீனா படைகள் முற்றிலும் வாபஸ்
- எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
- எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
புதுடெல்லி:
2020-ம் ஆண்டு மே மாதம் சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் நுழைய முயன்றது. இந்த முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்யும். எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் அகற்றப்படும்.