இந்தியா

பாஜக மீண்டும் வென்றால் Paytm-க்கு பதிலாக PayPM கொண்டு வருவார்கள்: பிரசாந்த் பூஷன்

Published On 2024-04-02 13:09 GMT   |   Update On 2024-04-02 13:09 GMT
  • ஊழல் குற்றசாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது - காங்கிரஸ்
  • மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது

ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுவதை தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

அதனையொட்டி, மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தி விமர்சித்தது.

அந்த வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் என்றும், இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுவதாக கற்பனை செய்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

அதில், "இப்போது வாஷிங் மெஷின்களையும் தேர்தல் பத்திரங்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் Paytm கொண்டு வர மாட்டோம். நேரடியாக பிரதமருக்கே பணம் கொடுக்கும் PayPM திட்டம் கொண்டு வருவோம் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News