இந்தியா

ஸ்மிரிதி இரானி, ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்

Published On 2022-07-29 07:57 GMT   |   Update On 2022-07-29 07:57 GMT
  • ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
  • சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News