இந்தியா

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட 1500 லிட்டர் பாயாசம்

Published On 2023-01-28 05:12 GMT   |   Update On 2023-01-28 05:12 GMT
  • குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.
  • பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

இங்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்க கோவிலின் மடப்பள்ளியில் பாத்திரங்கள் உள்ளன.

இதில் தயாரிக்கப்படும் பாயாசம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் கூடுதல் பாத்திரங்களில் பாயாசம் தயாரிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

இந்த உருளியில் ஒரே நேரத்தில் 1500 பேருக்கு பாயாசம் தயாரிக்க முடியும். இந்த உருளியில் தற்போது முதல் முறையாக பக்தர்களுக்கு பாயாசம் தயாரிக்கப்பட்டது.

இந்த பாயாசத்தையும் அதே பக்தர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News