இந்தியா

பியூஷ் கோயல்

பாராளுமன்ற மேலவை தலைவராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீண்டும் நியமனம்

Published On 2022-07-14 21:31 GMT   |   Update On 2022-07-14 21:31 GMT
  • மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
  • வர்த்தக, தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

நடப்பு ஆண்டு ஏப்ரலில் பியூஷ் கோயலின் எம்.பி.க்கான பதவி காலம் நிறைவடைந்தது. இதன்பின் கடந்த 8-ம்தேதி கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் 27 பேர் புதிதாக ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி.யாக கோயல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாராளுமன்ற மேலவையின் தலைவராக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம், ஜவுளி துறைக்கான மந்திரி பியூஷ் கோயல் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவரை பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபைக்கான விதிகளின்படி நியமனம் செய்துள்ளார். இதுபற்றி ராஜ்யசபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News