இந்தியா

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளை தூக்கில் போட கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Published On 2023-01-02 18:37 IST   |   Update On 2023-01-02 18:37:00 IST
  • குற்றவாளிகள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்ட கூடாது என்று கூறினார்.
  • ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது:

கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்து சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம்.

இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Tags:    

Similar News