இந்தியா

அனந்தநாக் தொகுதியில் குலாம் நபி ஆசாத் போட்டி

Published On 2024-04-02 15:17 GMT   |   Update On 2024-04-02 15:17 GMT
  • பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
  • ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஸ்ரீநகர்:

பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் , 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

Tags:    

Similar News