இந்தியா

கருட பஞ்சமியையொட்டி திருப்பதி கோவிலில் இன்று கருட வாகன வீதி உலா

Published On 2023-08-21 08:53 IST   |   Update On 2023-08-21 08:53:00 IST
  • கருட பஞ்சமியையொட்டி இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.
  • உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமியையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.

உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News