இந்தியா

தந்தையைத் தொடர்ந்து வருங்கால கணவரும் மருத்துவமனையில்... சோகத்தில் பிரபலம்!

Published On 2025-11-24 14:53 IST   |   Update On 2025-11-24 14:53:00 IST
  • திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்துள்ளது
  • ஸ்மிருதியின் தந்தை உடல்நலம் தேறிய உடன் திருமணம் நடைபெறும்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த வாரம் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வைத்து, ஸ்மிருதி மந்தனாவிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் பலாஷ் முச்சல். அவரின் காதலை ஏற்ற ஸ்மிருதி அவர்களின் திருமணம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News