இந்தியா

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-11-10 17:26 GMT   |   Update On 2022-11-10 17:26 GMT
  • வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
  • விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி தகவல்

அமராவதி:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்து பற்றி தகவல் அறித்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பட்டாசு விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாகவும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News