இந்தியா

4 மாநிலங்களில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. தேதி அறிவித்த தேர்தல் ஆணையம்

Published On 2025-05-25 20:25 IST   |   Update On 2025-05-25 20:25:00 IST
  • ஜூன் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
  • மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா, கேரளாவில் நிலம்பர், மேற்கு வங்காளத்தில் காளிகஞ்ச், குஜராத்தில் காடி மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

Tags:    

Similar News