இந்தியா

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

Published On 2023-10-10 10:26 GMT   |   Update On 2023-10-10 10:37 GMT
  • கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

15 அசையா சொத்துக்களும் கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.

சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News