இந்தியா
நாம் எதிரிகள் அல்ல.. நண்பர்கள்..! கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம்- டி.கே.சிவக்குமார்
- நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.
- மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது.
கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம். தமிழ்நாடு - கர்நாடகா அண்டை மாநிலங்கள். நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.
இங்குள்ள தண்ணீர் தமிழ்நாட்டுக்குச் செல்கிறது. அங்கிருந்து பலர் கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். நாம் எதிரிகள் அல்ல.. நண்பர்கள்.
மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்தப் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.