இந்தியா

தேர்தலுக்கு முன் கட்சி தாவும் வேலை வச்சுக்காதீங்க.. பீகார் கூட்டத்தில் மோடி எச்சரிக்கை

Published On 2025-05-30 13:18 IST   |   Update On 2025-05-30 13:18:00 IST
  • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்த வலியுறுத்தினார்.
  • நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்

பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது. இதில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் பீகார் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி பாஜக தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, "தேர்தல் நெருங்கும்போது, சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு திரும்பிவிடுவார்கள். இது கட்சியில் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது" என்று பிரதமர் மோடி பாஜக தலைவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், "ஒரு கட்சியில் பொறுமை என்பது மிகப்பெரிய சொத்து. உங்களிடம் பொறுமை இருந்தால், நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்" என்று அவர் கூறினார்.

வரவிற்கும் தேர்தலில், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்தவும், அடிமட்டத் ஊழியர்கள் அளவில் கட்சியை வலுப்படுத்தவும் வலியுறுத்தினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மகா கூட்டணியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் ஒன்பதாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அடிக்கடி கூட்டணி தாவுவதாக அவர் மீது விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News