இந்தியா

கோடை மழை பெய்துவரும் நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது

Published On 2024-04-16 06:13 GMT   |   Update On 2024-04-16 07:36 GMT
  • டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
  • காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 1,373 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 294பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜிகா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், கொசு உற்பத்தியை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News