இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த ராஜாஜியின் கொள்ளு பேரன்

பிரதமர் மோடியுடன் ராஜாஜியின் கொள்ளு பேரன் சந்திப்பு

Published On 2023-04-12 12:40 GMT   |   Update On 2023-04-12 12:40 GMT
  • ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் அக்கட்சியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி விலகினார்.
  • கேசவன் தலைநகர் டெல்லியில் கடந்த 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.

புதுடெல்லி:

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன்.

காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், அக்கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார். இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார்.

இதற்கிடையே, காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் கடந்த 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார்.

Tags:    

Similar News