இந்தியா

புதிதாக 490 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

Published On 2023-05-26 06:29 GMT   |   Update On 2023-05-26 06:29 GMT
  • இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு நேற்று 535 ஆக இருந்தது.
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 949 பேர் நலம் பெற்றுள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு நேற்று 535 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 490 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 916 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 949 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 51 ஆயிரத்து 353 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி 5,707 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 461 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News