இந்தியா

பீகார் தேர்தல்: 5 இடங்களில் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபித்த ஓவைசி

Published On 2025-11-15 10:57 IST   |   Update On 2025-11-15 10:57:00 IST
  • ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
  • முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.

ஐதராபாத் எம்.பி. அசாது தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்தது.

ஓவைசியின் கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது.

ஓவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிர்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர்க்காததால் அதிருப்தி அடைந்த ஓவைசி, பீகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஓவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.

பீகாரில் இதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால் அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.

Tags:    

Similar News