இந்தியா

பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன் சிங் பெயர் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Published On 2025-07-03 00:29 IST   |   Update On 2025-07-03 00:29:00 IST
  • பெங்களூரு கிராமப்புற (RURAL) மாவட்டம் "பெங்களூரு வடக்கு மாவட்டம்" என மாற்றப்படும்.
  • பாகேபள்ளி நகரம் "பாக்யநகரா" எனவும் பெயர் மாற்றப்படும் என அறிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் அரசு, இன்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நினைவாக பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் 'டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம்' எனப் பெயர் மாற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

மேலும், பெங்களூரு கிராமப்புற (RURAL) மாவட்டம் "பெங்களூரு வடக்கு மாவட்டம்" எனவும், பாகேபள்ளி நகரம் "பாக்யநகரா" எனவும் பெயர் மாற்றப்படும் என அறிவித்தார்.

சட்டவிரோத சுரங்கத்தைப் பற்றி ஆய்வு செய்ய, சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டில் தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.

மொத்தம் ரூ.3,400 கோடி நிதி ஒதுக்கீட்டில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குடியிருப்புப் பள்ளிகள் கட்ட ரூ.1,025 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெங்களூருவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்க ரூ.10 கோடி செலவில் இரண்டு குடியிருப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

சட்டவிரோத சுரங்கங்கள் பற்றி ஆய்வு செய்ய சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டில் தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.

யெத்தினஹோல் குடிநீர் திட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 9 மாவட்டங்களில் உள்ள 75 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News